வெளிப்படைத்தன்மை இருக்கட்டும்.
உயர்வான சிந்தனைகளின் ஊற்றுக்கண் எது?
அனுபவம் வாய்ந்த, பாரபட்ச
எண்ணம் இல்லாதவர்களிடம் பழகுதல், நிறைய நல்ல நூல்களை வாசித்தல், நல்ல நூல்களை
அடுத்தோர்க்கு அறிமுகம் செய்தல்,
சிறிது சிறிதாக நல்ல சிந்தனைகளைப் பரப்புதல், ஒவ்வொரு செயலின் பல்வேறு கோணங்களையும் உணர்தல்,
உடனிருப்போரின் நோக்கங்களைப்
புரிந்துகொள்ளுதல் போன்றவை எனப் பட்டியல் நீளூம்.
எவ்வளவு பெரிய நிறுவனமாக
இருந்தாலும் அதன் செயல்பாடுகளை தீர்மானிப்பவர்கள் ஒருசில நபர்களாகவே இருப்பர். அவர்கள் வெளிப்படைத் தன்மை உடையோராகவும், உயர்வான சிந்தனைகள் உடையோராகவும் அமைந்து விட்டால் அந்த நிறுவனத்தின் வெற்றி சிறப்பாக இருக்கும்.
சில நேரம் ஒருவரது நோக்கம் புரிந்துகொள்ளப்படாமல் அவருடைய செயல்கள் விமர்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கலாம். அதனால் தவறில்லை.
விமர்சனத்துக்கு ஆளாகாமல்
இருப்பதற்கு ஒரேவழி எந்தச் செயலையும் செய்யாமல் சும்மா இருப்பதுதான். சும்மா இருப்பதைவிட விமர்சிக்கப்படுவதே நல்லதல்லவா.
No comments:
Post a Comment