Saturday 28 May 2022

பாடமும் பாதையும் .

 பாடமும் பாதையும் .

அவமானத்தை வலியாய் எடுத்துக்கொள்ளாதீர்
வழியாய் எடுத்துக்கொள்ளுங்கள்.
இங்கே கை தூக்கி விடுபவர்களை விட கையில் தள்ளி கீழே விழ வைப்பவர்களே அதிகம்.
எதிரில் நிற்பவரெல்லாம் எதிரியுமில்லை. தோளில் கையிட்டவனெல்லாம் நண்பனுமில்லை!இதை உணர்ந்து கொண்டவருக்கு கவலையுமில்லை.
வாழ்க்கை ஒரு "ஓவியம்" அல்ல, திரும்பத் திரும்ப வரைவதற்கு. அது ஒரு "சிற்பம்" செதுக்கினால் செதுக்கியதுதான்.
உங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..!!அவர்களுக்கு விளையாட ஏதேனும் தேவைப்படும் போது உங்கள் ஞாபகம் வரலாம்.
கஷ்டங்களும் அனுபவமும் நம்மை சூழும் போது தான் வாழ்க்கை நமக்கு நல்ல பாடத்தையும் பாதையும்தெளிவாகக் காட்டும்.
மகிழ்ச்சி என்பது நீங்கள் யாராக இருந்தாலும் அல்லது நீங்கள் என்ன வைத்து இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அல்ல.அது நீங்கள் நினைப்பதைப் பொறுத்தது.
வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு. வாழ்வது உயிர்கள் மட்டும் அல்ல, வார்த்தைகளும் தான்.
தன் வலிமை தெரியாமல் உயரப்பறக்க நினைக்கும் பறவைகள் எல்லாம் வானில் உயரப்பறந்து விடுவதில்லை.
கழுகும் பறவை தான். குருவியும் பறவை தான். அதனதன் வலிமை அதனதன் உயரம்.
உங்களுக்கான நேரம் குறைவானது, எனவே வேறொருவரின் வாழ்க்கையை வாழ்ந்து அதை வீணடிக்க வேண்டாம்.
பிறரிடம் இருந்து எதையும் பிரபஞ்சம் உங்களுக்குப் பிடுங்கி கொடுப்பதில்லை.
உங்களுக்கானது உங்களை வந்தடையும், எனவே பிறரின் வளர்ச்சியைக் கண்டு மகிழுங்கள், வாழ்த்துங்கள். விரைவில் நீங்களும் அந்த நிலையை அடைவீர்கள்.
எந்த விஷயம் நீங்கள் செய்தாலும் என்றுமே நம்பிக்கையோடு கடைபிடிக்க வேண்டிய தாரக மந்திரம் என்னால் முடியும் என்பது தான்.
ஒரே நாளில் எதுவும் கிடைத்து விடாது. ஆனால் ஒரு நாள் எல்லாம் கிடைக்கும்.

No comments:

Post a Comment