Wednesday 20 April 2022

பூமியுடன் தொடர்பில் இருங்கள்.

 பூமியுடன் தொடர்பில் இருங்கள்.

நம்மில் எத்தனை பேர் தினமும் பூமியுடன் தொடர்பில் உள்ளோம் அதாவது வேறும் கால்களுடன் நிலத்தில் நடக்கிறோம் ?
பதில்
முக்கால்வாசி இல்லை என்பதே.
வெறும் கால்களுடன் நடந்ததால் நோய் தொற்றிக்கொள்ளும் எனச் சொல்லியே காலணிக்கு (செருப்பு) பழகினோம், இப்பொழுது காலணியை விட shoes அணிவதை மார்டனகவும், பெருமிதமாகவும் கொள்கிறோம்.
சரி இப்போது university of California மற்றும் journal of Environmental and Public Health இவை இரண்டு அமைப்புகளும் மனிதன் காலணி அணியாமல் வேறும் கால்களுடன் பூமியில் நடந்தால் மனித உடம்பில் ஏற்படும் மாற்றம் பற்றி ஒரு ஆய்வு நடத்தின, அந்த ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையைப் பார்ப்போம்.
ஆய்வறிக்கைப்படி நாம் பூமியில் வேறும் கால்களுடன் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்:
புவி இயற்கையாகவே negative charge (-) கொண்டது மற்றும் anti-oxidants கொண்டது, எனவே வேறும் கால்களுடன் நாம் பூமியில் நடக்கும் போது உடல் செல்களை பாதிக்கும் தொடர் செயல்முறையான ஆக்சிஜனேற்றம் தடுக்கப்படுகிறது அதாவது உடலுக்கு நேரடியாக பூமியில் இருந்து vitamin "C" கிடைக்கிறது.
உடலில் எலக்ட்ரான் ஓட்டம் தடையில்லாமல் சீராக பரமரிக்கபடுகிறது.
எலும்பு,கல்லிரல்,மூளை(பார்கின்சன்) போன்ற உறுப்புகளை பாதிக்கும் நாள்பட்ட சிதைவு எனப்படும் Chronic Degenerative Diseases க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
மற்றும் வெறும் கால்களுடன் நடப்பதன் மூலம் chronic stress, உடல்வலி,தூக்கமின்மை,உடல் வீக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது
தொடர்ந்து ஒருமணிநேரம் இடைவெளியில் பூமியில் தொடர்பில் இருப்பதன் மூலம் முகத்தில் இரத்தஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் சீராக பராமரிக்கப்படுகிறது, இதன் மூலம் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கிறது (முகத்திற்கு முகபொலிவிற்காக பயன்படுத்தும் cream அவசியம் இருக்காது)
மிகமுக்கியமாக blood viscosity (இரத்த பாகுத்தன்மை))
குறைக்கப்படுகிறது இதனால் இதயநோய்கள் முற்றிலும் குறைக்கபடுகிறது.
எனவே *இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள், இதுவே நமக்கும் நம் தலைமுறைக்கும் நல்ல வாழ்வியலைத் தரும், மற்றும் நாகரீகத்தால் வரும் நோய்களைக் களையெடுக்கும்.*
முடிந்தவரை மரகன்றுகளை நட்டு பராமரியுங்கள்.

No comments:

Post a Comment