அனுபவமும் அன்பும் . .
வாழ்க்கையில் தண்ணீரைப் போல் இருங்கள்..!அதனால் ஒதுங்கிச் செல்லவும் முடியும்..!
உடைத்து எறியவும் முடியும்..!
அறிவை விடப் புரிதல் தான் மிகவும்
ஆழமானது.நம்மை அறிந்தவர் பலர் இருப்பர்கள்..!ஆனால் நம்மைப் புரிந்தவர் ஒரு சிலரே இருப்பார்கள்.!
நாம் இல்லாத இடத்தில் நம்மைப் பற்றி என்ன பேசி இருப்பார்கள் என்பது மட்டும் தெரிந்து விட்டால் இவ்வுலகில் எந்த உறவும் நிலைக்காது..!
எவ்வளவோ பாடம் படித்திருந்தாலும்
வெளியுலக அனுபவப் பாடம் தான்
உங்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
உனக்கு உண்மையாக
இருப்பவர்களுக்கு மட்டும் நீ
உண்மையா இரு..!
அதை விட்டுவிட்டு எல்லாருக்கும்
உண்மையா இருந்தால் நீ நல்லவன் இல்லை முட்டாள்.
மனம் ஒரு மாயச் சாவி. முடியும் என்று நினைத்து விட்டால் எத்தனைப் பெரிய பூட்டுகளையும் திறந்து விடும். முடியாது என்று முடிவு செய்து விட்டால் தான் சாவி என்பதையே மறந்து விடும்.
மனதால் மறக்க முடியாத இரண்டு வகையானவர்கள். ஒன்று கஷ்டத்தில் காப்பாற்றியவர்கள். இன்னொன்று கஷ்டப்படக் காரணமானவர்கள்.
மனதால் எவ்வளவு பலமானவர்களையும் அழ வைக்கும் ஒரே ஆயுதம் உண்மையான அன்பு மட்டுமே.
அன்பினால் ஆள வேண்டிய மனங்களை அதிகாரத்தினால் அடக்காதீர்கள்.
ஆள்வதில் இல்லை உங்கள் அன்பு. இதயத்தில் வாழ்வதில்
உள்ளது உண்மையான அன்பு
No comments:
Post a Comment