Thursday 28 April 2022

எதிர்காலம் என்பது ஏறிச் செல்லும் ஏணிப்படிகளே.

 எதிர்காலம் என்பது

ஏறிச் செல்லும் ஏணிப்படிகளே.
பகிர்ந்து கொள்ளாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.
நேரத்திலும், நேர்மையாக இருப்பதிலும் கவனமாக இருங்கள். தவற விட்டுவிட்டால் மறு வாய்ப்பு கிடையாது.
பயந்து நடக்காதீர்கள்.கிடைத்த வாய்ப்பும் தொலைந்து போகும். துணிந்து செல்லுங்கள் வந்த துன்பமும் விலகிப் போகும்.
பிறந்து விட்டோம் என்பதற்காக வாழாதீர்கள்... அது கடனாய் முடியும்... வாழ்வதற்காகப் பிறந்திருக்கிறோம் என்று எண்ணுங்கள் வாழ்வு இனிக்கும்.
வாழ்க்கைப் புத்தகம் கற்றுக் கொடுப்பது ஒன்றுதான்... வெறுப்பவர்களைத் தேடாதீர்கள்... விரும்புபவர்களை விட்டு விடாதீர்கள்.
எதுவாயினும் எதிர் கொள்ளுங்கள்... எதிர்காலம் என்பது எரிமலை அல்ல... ஏறிச்செல்லும் ஏணிப்படியே.
எல்லா உறவுகளும் ஒருநாள் கசந்துபோகும்... எல்லா ஆச்சர்யங்களும் ஒருநாள் சலித்துப் போகும்.
எல்லா சுவாரசியங்களும் ஒருநாள் நீர்த்துப் போகும்... இருப்பினும் அதனைத் தேடித் திரிவதுதானே மானுட வாழ்க்கை.
எதிர்பார்க்கும் சந்தோசங்களை விட, எதிரில் வந்து நிற்கும் துன்பங்கள் தான் வாழ்க்கையை எளிதில் கற்றுத் தருகின்றது.
நிம்மதி வேண்டுமென தேடுகிறோமே தவிர ஆசைகளைக் கைவிட யாருமே நினைப்பதில்லை.
நிறைய உழைக்கத் தெரிந்த அளவிற்கு கொஞ்சம் போல் நடிக்கத் தெரிந்திருந்தால், வாழ்வின் சில பள்ளங்கள் மேடாகியிருக்கும்.

No comments:

Post a Comment