Saturday 23 April 2022

மகத்தான மனிதர்கள் பங்கேற்ற திருமுறைக் காவலர் முபழ. கண்ணப்ப செட்டியார் கண. மனோன்மணி ஆச்சி 80 ஆண்டு முத்து விழா.

 மகத்தான மனிதர்கள் பங்கேற்ற

திருமுறைக் காவலர்
முபழ. கண்ணப்ப செட்டியார்
கண. மனோன்மணி ஆச்சி
80 ஆண்டு முத்து விழா.
இன்று காலை அழகர்கோவில் அருகில் உள்ள ஏகேஎன்கே பேலஸ்
பிரம்மாண்டமான அரங்கில் அறப்பணிச் செம்மல், சைவமும் தமிழும் தழைத்தோங்கிட நாளும் துணை நிற்கும் பெருங் கொடையாளர், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் தலைவர், பல்வேறு ஆன்மிக அமைப்பின் முன்னோடி, ஸ்ரீ மங்கையர்க்கரசி ஆலை சேர்மன் பாகனேரி
முபழ. கண்ணப்ப செட்டியார்
கண. மனோன்மணி ஆச்சி
80 ஆண்டு முத்து விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்
தலைமை குருக்கள், விகாஸ் ரத்னா
டாக்டர் பிச்சை குருக்கள் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
மூத்த குருக்கள் ராஜா பட்டர் தலைமையில் பங்கேற்ற மெய்யன்பர்கள் சிறப்பாக நடத்தி வைத்தனர்.
ஓதுவார்களின் திருமுறை, நாதஸ்வர சிறப்பு நிகழ்ச்சியுடன்
வாழ்த்தரங்கம் நடைபெற்றது. மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் 42 நிமிடமும்
நகைச்சுவை அரசு
தேவகோட்டை எஸ். ராமநாதன்
38 நிமிடமும் தம்பதியரின் பல்வேறு சிறப்புக்களை எடுத்துரைத்தனர்.
மதுரை நகரத்தார் சங்கத்தின் துணைத் தலைவர் வி. வயிரவன், செயலாளர் ஆர். மெய்யப்பன், அலவாக்கோட்டை சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
நகரத்தார் சமூகத்தின் முன்னோடிகள், ஆலை அதிபர்கள், பல்வேறு துறை பெருமக்கள், நண்பர்கள் உறவினர்கள் என அரங்கம் நிரம்பி இருந்து வாழ்த்துப் பெற்றும், வழங்கியும் மகிழ்ந்தனர்.
நேற்றும் இன்றும் இன்னொரு சித்திரைத் திருவிழா போல நடைபெற்ற நிகழ்வுகளை அவர்களது பிள்ளைகள் கண. முருகேசன் மங்களம், பழ. அங்கயற்கண்ணி பழனியப்பன் ரெ. மங்கை ரெங்கநாதன் குடும்பத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
முத்து விழாத் தம்பதியர் அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்தி மகிழ்வோம்.


















No comments:

Post a Comment