Tuesday 13 June 2023

அமைதி ஆனந்தம் தெளிவு.

 அமைதி ஆனந்தம் தெளிவு.

நெருப்பில் போடப்பட்ட இரும்பு தூய்மை அடைவதைப் போல, நீங்களும் உங்களை சில பயிற்சிகள் மூலம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான், நீங்கள் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் யார் என்பது புரியும்.
*''தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை. தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்..."*
என்பார் திருமூலர்.
தான் யார் என்று தெரித்து கொள்வதற்குத் துணை செய்வது தியானம் ஆகும். தியானம் என்பது அமைதி, விழிப்புணர்வு, தெளிவு, ஆனந்தம் ஆகியவற்றைக் கொண்டு வரக்கூடிய ஒரு மனநிலை.
குறைந்தபட்சம் தேவைப்படும் போதெல்லாம் தியான நிலையில் இருக்க முடியுமானால், அந்த மனநிலையை ஏற்படுத்த முடியுமானால் போதும், தம் வாழ்க்கையை தாம் விரும்பும் விதத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் முன்னேறிப் போனால், அடுத்தவர் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கலாம்.
வெற்றி என்பது உங்களுக்கு வெளியே எங்கோ உள்ள ஒரு பொருளல்ல. அது உங்களுக்கு வெகு அருகாமையிலே உள்ளது. இன்னும் சொல்லப் போனால் அது உங்களுக்கு உள்ளேயே உள்ளது.
திரும்பத் திரும்ப எதைச் சொல்கிறோமோ அது நமது ஆழ்மனத்தில் ஆழப் பதிந்து விடுகிறது. அதற்கு ரொம்ப சக்தி உண்டு. அதனால் நம்மை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.

No comments:

Post a Comment