வாழிய புதுமணத் தம்பதியர்.
16.06.2023 நேற்று இரவு மதுரை நாகமலைப் புதுக்கோட்டை நான்கு வழிச் சாலையில் உள்ள எலைட் மாஸ்டர் மகாலில் நடைபெற்ற அன்புச் சகோதரர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மூத்த வழக்கறிஞர், மிகச் சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர், தொடக்க காலம் தொட்டு நம்முடன் பயணப்படும் கே. சாமிதுரை (இவரது தந்தை மதுரையின் புகழ்மிக்க வழக்கறிஞர் குற்றாலம், அவர் என் தந்தைக்கு நெருங்கிய நண்பர்)
அவர்கள் மகன்
விஷ்ணு - ஷரோன் ஸ்டெபி
மதுரை இலக்கியப் பேரவை நிறுவனர், பட்டிமன்ற நடுவர் சண்முக திருக்குமரன் தம்பதியர், நீதியரசர்கள் திருமதி விமலா(இவரது மகன் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் விவேக் என்பது கூடுதல் சிறப்பு) உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள்,
சின்னத் திரை தயாரிப்பாளர்கள் டி வி அன்பு, தொலைக்காட்சி உரிமையாளர் அசோக், மள்ளர் சேணை நிறுவனர் வழக்கறிஞர் சோலை பழனிவேல்ராஜன், டாக்டர் எஸ். புஷ்பமாரி,
செல்லமுத்து அறக்கட்டளை டாக்டர் சி ஆர் எஸ் தம்பதியர், மேனாள் ஏ டி எஸ் பி. குமாரவேல், நல்லாசிரியர் சந்திரன், கவிக்குயில் கணேசன், சாதனையாளர் ரஞ்சித் தம்பதியர், அரவிந்த் மீரா சர்வதேச பள்ளி முதல்வர் சுஜாதா, நண்பர் வையாபுரி, அம்மா மெஸ் செந்தில்வேல், மேனாள் காவல் துறை உதவி ஆணையர் ஜெயசிங், இந்தியன் வங்கி மேலாளர் மணிமேகலை,
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கே. சுந்தரவேல், அருண் சுவாமிநாதன் உள்ளிட்ட ஏராளமான மூத்த வழக்கறிஞர்கள் , பெட்கிராப்ட் எம். சுப்புராம், டாக்டர் பொன்ராஜ், மூத்த பத்திரிகையாளர் ரமேஷ், மணிமாறன், புகைப்பட கலைஞர் சார்லஸ் தம்பதியர், மின்வாரிய பொறியாளர் மெய்.பால ராமலிங்கம் , காவல்துறை உயரதிகாரி அமல்ராஜ் உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர்.
மதுரை மாநகர தொழிலதிபர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள்,இலக்கிய அன்பர்கள், பொது நலன் அமைப்பினர், சாமிதுரை சகோதரர்கள் என எங்கும் பெருமக்களின் திருக்கூட்டம்.
சிறப்பான அசைவம் மற்றும் சைவம் உணவு ஏற்பாடு.
இது ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாக நடைபெற்றது.
No comments:
Post a Comment