Monday 12 June 2023

ஒவ்வொருவரின் தனித் தன்மை.

 ஒவ்வொருவரின் தனித் தன்மை.

மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது என்பது, அவர்களுடைய தனிப் பண்புகளைப் புரிந்துகொண்டு பாராட்டுவதாகும்.
*சிந்திக்க வேண்டிய கருத்து:*
நம்முடைய சொந்த எதிர்ப்பார்புகளுக்கும், நற்குணங்களுக்கும் ஏற்றாற்போல் மற்றவர்கள் மாறவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இருப்பினும், பெரும்பாலும், எதுவும் நம்முடைய தேவைக்கு ஏற்ப மாறாமல் இருப்பதை நாம் காண்கின்றோம். இது, வெறுப்பையும் அதிருப்தியையும் உண்டாக்குகின்றது.
நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு நபரும், வித்தியாசமானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்; ஒவ்வொருவரும், தனித்தன்மை வாய்ந்தவர்கள்; அற்புதமான குணாதிசயங்களையும் திறமைகளையும் கொண்டவர்கள்.
நாம் மற்றவர்களை இவ்வாறாகப் பார்க்கும்போது, நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்கள் மாற வேண்டும் என நாம் மேற்கொண்டு எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதற்கு மாறாக, அவர்கள் யார் என்பதை அறிந்து, அவர்களுக்கு நாம் மரியாதை கொடுப்பதை காண்கின்றோம்.

No comments:

Post a Comment