Monday 19 June 2023

கி. வேலாயுதன் - சாந்தா வேலாயுதன் 54 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு

 தமிழ் கூறும் நல்லுலகின் மூதறிஞர், நின்ற சொல்லர், பேச்சுலகப் பெருமக்களின் வழிகாட்டி, பிழையின்றி இலக்கண வழியில் பேசுவதற்குப் பெரும் துணையாக உள்ள புலவர்

கி. வேலாயுதன் - சாந்தா வேலாயுதன்
54 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு நேற்று மதுரைத் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் நண்பகல், மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், பேராசிரியர் சி எஸ். விசாலாட்சி
பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.
அருகில் ஐயா அவர்களின் மாப்பிள்ளை ஜி. மோகன் - மீனாம்பிகை, எம். ஸ்ரீ ராம் மற்றும் தருண், மூத்த மகன் வே. கார்த்திகேயன் - உஷா, ஸ்ரீ நிதி, இளைய மகன் வே. மாதவ கிருஷ்ணன் - கல்பனா, மா. ஆனந்தி உள்ளனர்.
செம்மொழித் தமிழுக்கு நாளும் அணி சேர்த்திடும் வகையில், தமிழும் இலக்கியமும், தேச உணர்வும் மேன்மை பெற்றிடத் துணை செய்யும் இத் தம்பதியரை வணங்கி வாழ்த்திடுவோம்.
நமது விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர், அருட்செல்வர்
எஸ். சீத்தாராமன்
அவர்களின் பேரன்புக்கு உரியவர் புலவர் கி. வேலாயுதன் அவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.





No comments:

Post a Comment