Monday 27 March 2023

நாம் சரியாக இருப்போம்.

 நாம் சரியாக இருப்போம்.

துன்பத்திற்காக காரணம் ஆசைப்படுவது.
பெரும்பாலும் நேர்மையானவர்கள் தன்னைப்போல மற்றவர்களும் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற மனப்பக்குவத்தில் இருக்கிறார்கள்.
இது ஒரு நிறைவேறா ஆசை .
அதனால் அவர்கள் அதிகம் துன்பப்படுகிறார்கள்.
குரு ஒருவர் தன் மீது பற்றுள்ள சீடர்களை அழைத்து ஊரைச் சுற்றி வந்து காண்பதைக் கூறுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.
இரு சீடர்களும் குரு சொன்னபடியே சுற்றி வந்து குருவிடம் தான் கண்டதை விவரிக்கிறார்கள்.
முதல் சீடன் ஊரில் அனைவரும் பொய் கூறுகின்றனர்.
யாருக்கும் யாரும் உண்மையாக இல்லை ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்கின்றனர், கெட்டவர்கள் என்று கூறினார்.
இரண்டாவது சீடன் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் பிறர் துன்பங்களை மறக்க நல் வார்த்தைகளைக் கூறி அன்போடு அனைவரும் மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று குருவிடம் கூறுகிறார்.
இருவர் கூறியதையும் கேட்ட குரு
நாம் நினைப்பது போல் மக்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும் அதனால் நாம் துன்பப்படுவோம் என்று கூறினார்.
நான் நல்லவனாக இருந்தால் நம்மால் முடிந்த நல்லதையும் நேர்மையான செயல்களையும் செய்து விட்டு வாழ்க்கையில் கடந்து செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment