Monday 27 March 2023

உலகின் மிக உயரமான ரெயில் பாலத்தில் சோதனையோட்டம் வெற்றி: ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்முவில் பாயும் சீனாப் நதியின் குறுக்கே (பக்கல் - கௌரிக்கு) அமைக்கப்பட்டுள்ள இணைப்புப் பாலத்தில் ரெயில் சோதனை ஓட்டம் மார்ச் 21 ஆம் தேதியன்று வெற்றி கரமாக இயக்கப்பட்டது. 359 மீ.உயரத்தில் 1315 மீ. நீளத்தில் உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட் டுள்ள ரெயில் பாலம் இதுதான். 272 கிமீ தூரமுள்ள உதம்பூர் - ஶ்ரீநகர் - பாரமுல்லாவை இணைக்கிறது இப்பாலம். பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள், வியாபாரிகள் & இராணுவ வீரர்கள் எளிதாகச் சென்று வர இப்பாலம் பெரிதும் பயன்படும்.

No comments:

Post a Comment