Saturday 18 March 2023

மாநகர் மதுரையில் கிரடாய் அமைப்பு, கட்டுமானத் துறையில் புதிய வரலாறு படைக்கும் தனி வீடுகள், அடுக்கக வளாகம், மனை இடங்கள் என பிரம்மாண்டமான முறையில் தமுக்கம் மாநாட்டு வளாகத்தில் நேற்று தொடங்கியது. நேற்று மாலை மனிதத்தேனீ பார்வையிட்டு மகிழ்ந்த தருணம்.

 மாநகர் மதுரையில் கிரடாய் அமைப்பு, கட்டுமானத் துறையில் புதிய வரலாறு படைக்கும் தனி வீடுகள், அடுக்கக வளாகம், மனை இடங்கள் என பிரம்மாண்டமான முறையில் தமுக்கம் மாநாட்டு வளாகத்தில் நேற்று தொடங்கியது.

நேற்று மாலை மனிதத்தேனீ பார்வையிட்டு மகிழ்ந்த தருணம்.
வீட்டு மனை இடம் இரண்டு லட்சம் ரூபாய் முதல் மற்றும் வீடுகள் லட்சங்களில் தொடங்கி கோடி ரூபாய் வரை வீடுகள்.
அவரவர் வசதிக்கு ஏற்ப இருபது வெற்றிகரமான நிறுவனங்கள் பங்கேற்று வாடிக்கையாளர்கள் மனதில் நம்பிக்கை விதைக்கின்றனர்.
மேலும் கடன் வசதிகள் தரும் நிறுவனங்கள் பங்களிப்பு.
சென்ற இடத்தில் அவர்களின் அன்புக்காக இருபது நிமிடங்கள் உரையாற்றிய மனிதத்தேனீ.
இதன் தமிழகத் தலைவர் அருமை நண்பர் விஷால் குழுமத்தின் தலைவர் இளங்கோவன்.
மதுரை அமைப்பு தலைவர் மேக்ஸ் எஸ் எஸ். ராமகிருஷ்ணன், செயலாளர் விஜய தயா எஸ்ஆர். முத்து விஜயன், துணைத் தலைவர் எங்கள் மாப்பிள்ளை விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் ஸ்ரீ குமார், துணைச் செயலாளர் அன்புத் தம்பி அண்ணாமலையார் பில்டர்ஸ்
எம். அழகப்பன், பொருளாளர் ஜெயபாரத் ஜெயக்குமார், மற்றும் நண்பர் ராஜன் குரோ விஜய பாரதி, நமது கன்ஸ்ட்ரக்ஷன் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மிகச்சிறந்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
பெருந்திரளான மக்கள் கண்காட்சியில் பங்கேற்று வருவது மதுரையில் புதிய வரலாறு.
நண்பர்கள் காரைக்குடி பொறியாளர் வள்ளி கன்ஸ்ட்ரக்ஷன் நாகப்பன், எக்கோவின் நாக லெட்சுமணன் உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
மதுரையில் கட்டிட துறையில் மகத்தான சாதனை படைத்து வரும் நமது செம்மொழித் தமிழுக்கு நாளும் அணி சேர்த்திடும் விஸ்வாஸ் எஸ். சீத்தாராமன் மற்றும் அண்ணாமலையார் பில்டர்ஸ் எம். அழகப்பன் அழைப்பினை ஏற்றுப் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி.
வாழிய நமது தொன்மையான 6000 ஆண்டுகால மதுரையின் சிறப்பு.
தமுக்கத்தில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நடைபெறும் கட்டுமான கண்காட்சி கிரடாய் பேர்ப்ரோ 2023.
அனைவரும் பங்கேற்றுப் பயன் பெறலாம்.



















































No comments:

Post a Comment