Wednesday 22 March 2023

இப்படி ஒரு கவிதையை ஒரு ஆசிரியராக படிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை

 இப்படி ஒரு கவிதையை ஒரு ஆசிரியராக படிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை*

👇👇👇
*பள்ளிக்கூட*
வகுப்பறையில்
*சல்லித்தனம்*
நடக்குது!
*சொல்லித்தரும்*
வாத்தியார
*சுள்ளானெல்லாம்*
அடக்குது!
*வீணைன்னு*
நெனச்சதெல்லாம்
*விசிலடிச்சுத்*
திரியிது!
*தூணுன்னு*
நெனச்சதெல்லாம்
*துருப்பிடிச்சு*
உரியுது!
*முத்தலாக*
விளையும் பயிர்
*முளையிலயே*
தெரியுது!
*பெத்தவங்க*
அடிவயிறு
*பெட்ரோலா*
எரியுது!
*குத்து விளக்கு*
எல்லாம்
*கூட்டம் சேர்ந்து*
குடிக்குது!
*கத்துத் தரும்*
வாத்தியார
*சுத்தி கும்மி*
அடிக்குது!
*முடி வெட்ட*
சொன்னதுக்கே
*முறுக்கிக்கிட்டு*
மொறைக்குது!
*அடிபட்ட*
நாயப்போல
*ஆத்திரத்தில்*
குறைக்குது!
*தேர்வெழுத போகும்*
கையில்
*பீர் பாட்டில்*
நுரைக்குது!
*போற பாத*
தெரியாம
*போத கண்ண*
மறைக்குது!
*வால் இல்லா*
வானரங்க
*வகுப்பறைய*
கெடுக்குது!
*மேல்நிலைப் பள்ளி*
மேசைகள
*மேல ஏறி*
ஒடைக்குது!
*பாடம் வகுப்பில்*
நடக்கும்போதே
*பாட்டுப்பாடி*
ஆடுது!
*தோரணையா*
படுத்துத் தூங்க
*தோழி மடியத்*
தேடுது!
*படிக்கச் சொன்ன*
வாத்தியார
*அடிக்க கைய*
ஓங்குது!
*மாணவ*
சமுதாயத்தோட
*மானத்தையே*
வாங்குது!
*சமுத்திரமா*
நினைச்சதிப்போ
*சாக்கடையா*
தேங்குது!
*சமுதாய*
நலன்களுக்கு
*மிகப்பெரிய*
தீங்கிது!
*வருங்காலத்*
தூண்களெல்லாம்
*வளஞ்சு போயி*
கெடக்குது!
*பெரம்பெடுத்து*
திருத்தலாம்னா
*சட்டம் வந்து*
தடுக்குது!
படித்ததில் பிடித்தது....

No comments:

Post a Comment