Monday 20 March 2023

எங்கள் மூத்த ஆச்சியின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாள். இன்று காலை மதுரை திருநகரில் எங்கள் மூத்த ஆச்சி நெற்குப்பை விசாலாட்சி சொக்கலிங்கம் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்பாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு இன்று காலை திருநகர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்வீடு டிரஸ்ட் நிர்வாகி கோவிந்தராஜ் சிறப்பாக நடத்தி வரும் நகர்ப்புற வீடற்ற ஏழைகள் இல்லத்தில் சிறப்பு உணவு வழங்கி வழக்கம் போல எங்கள் வீட்டுப் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடுகின்றோம். இன்று மூன்று வேளை சிறப்பு உணவு வழங்கியும் அதனைத் தொடர்ந்து மதியம் சிறப்பு உணவு ஆஸ்டின்பட்டி செஷயர் ஹோம் இல்லத்தில் மற்றும் இரவு சிறப்பு உணவு திருநகர் பாலர் இல்லத்தில் வழங்கப்படுகின்றது. மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் , அலமேலு சொக்கலிங்கம், ஆர். விஸ்வநாதன், அலமேலு விஸ்வநாதன், ஆர். சம்பந்தன், வள்ளியம்மை சம்பந்தன் மற்றும் பேராசிரியர் சி எஸ் விசாலாட்சி உள்ளனர். வாழிய விசாலாட்சி சொக்கலிங்கம் திருக் குடும்பம் வாழியவே.





 

No comments:

Post a Comment