Tuesday 31 January 2023

வழி உண்டு.

 வழி உண்டு.

நீங்கள் பறக்க வேண்டும் என்று முடிவெடுத்து
விட்டால் முதலில் உங்கள் மனதிலுள்ள சுமையை வீசி எறியுங்கள்.
அப்பொழுது தான் ஒரு பாரமும் இல்லாமல் நீங்கள் நினைத்த லட்சியத்தை அடைய முடியும்.
எத்தனை வலிகள் வந்தாலும், ஏதாவது ஒரு வழி உண்டு,
தட்டிய கதவுகள் தான் திறக்கப்படும். சிந்தனை முழுக்க வலியின் மேல் வைக்காமல் வழிகளின் மேல் செலுத்து.
விழிகளை மூடாது ஓயாது போராடிக் கொண்டேயிரு வெற்றி நிச்சயம்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும்
எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.
கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமே தூக்கம், எனவே
கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.
*உறவில் உரிமையைக்
கொடுங்கள். *
*வாழ்க்கையில் நம்பிக்கையைக் கொடுங்கள். *
*அன்பில் உண்மையைக்
கொடுங்கள். *
*நட்பில்
நேர்மையைக் கொடுங்கள் சந்தோஷம் தானாக அமையும். *

No comments:

Post a Comment