Friday 6 January 2023

கவனத்தில் கொள்ள வேண்டும்.

 கவனத்தில் கொள்ள வேண்டும்.

*இன்றைய வேலைகளிலிருந்து தப்பிக்கும் ஒரே வழி ஒத்திப் போடுவது என்பது.*
*ஒரு செயலை எப்படிச் செய்வது என்பது தெரியாது என்பதால் ஒத்திப் போடுகிறோம்..*
*நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லாததனால் ஒத்திப் போடுகிறோம்..*
*நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மை காரணமாக ஒத்திப் போடுகிறோம். வெற்றி பெற முடியாது என்று எண்ணி ஒத்திப் போடுகிறோம்..*
*சோம்பேறித்தனத்தின் காரணமாக ஒத்திப் போடுகிறோம்.*
*உடலுமும் உள்ளமும் களைப்பாக இருக்கிறது என்பதற்காக ஒத்திப் போடுகிறோம்..*
*துக்கத்தின் காரணமாக ஒத்திப் போடுகிறோம்.*
*இப்படிப் பல காரணங்களைத் தேடி ஒத்திப் போடுகிறோம்..*
*ஒத்திப் போடுவதற்குக் காரணம் தேடும் நாம் நமது வீடு தீப்பற்றிக் கொண்டது என்றால் தீயை அணைப்பதை ஒத்திப் போடுவோமா.*
*எந்த முடிவையும் எடுப்பதில்லை என்று முடிவு எடுப்பதை விட எதாவது ஒரு முடிவை எடுக்கலாம்.*
*அது தோல்வியில் முடிந்தால் கூட முயற்சி எடுத்தோம் என்ற அளவிளலாவது மகிழ்ச்சி அடையலாம்.*
*சில நேரங்களில் முடிவு எடுக்க முடியாததிற்கு இதுவா அதுவா இப்படிச் செய்யலாமா அல்லது அப்படிச் செய்யலாமா என்ற குழப்பமே காரணம்..,*
*ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பதில் ஒரு தயக்கம் முடிவெடுக்கும் தருணத்தில் யோசிப்பது நாம் செயல் படுவதைத் தள்ளிப் போட வைக்கிறது..*
*எடுத்துக்காட்டாக உங்கள் வாகனம் சுத்தம் செய்தல், குளியல் அறை சுத்தம் செய்தல், சில முக்கிய வேலைகள் என்று நாளும் எதையாவது தள்ளிப் போட்டுக் கிட்டே தான் இருக்கிறோம்.*
*நாம் செயல்படுவதில் முன்னுரிமை காரணமாக தள்ளிப் போடுவதாகக் கூறிக் கொண்டாலும்,அதற்குப் பிறகு அப்பணியை செய்வதே இல்லை, அப்பணியை நிறுத்தியே விடுகிறோம்.*
*இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள்.. நாளைய வேலையைக் கூட முடிந்தால் இன்றே செய்யுங்கள்;*
*ஆனால், இன்று செய்ய வேண்டிய வேலையை, நாளைக்கு என்று ஒருபோதும் ஒத்திப் போடாதீர்கள்.*
*நாளை என்பது நமதில்லை. நேரம் கிடைப்பது இல்லை என்பதல்ல..*
*நம் சோம்பேறித்தனம் தான் காரணம்.*

No comments:

Post a Comment