Tuesday 17 January 2023

திருநகரில் நடைபெற்ற பொங்கல் திருநாள் திருவிழா. மதுரை திருநகர் மகாலெட்சுமி நெசவாளர் காலனியில் உள்ள ஸ்ரீ மந் நடனகோபால நாயகி சுவாமிகள் இயக்கத்தின் சார்பில் இன்று மாலை நடைபெற்ற பொங்கல் திருநாள் பரிசளிப்பு விழாவிற்கு மேனாள் சேர்மன் ஆர் கே பலராமன் தலைமை வகித்தார், மேனாள் சேர்மன் மற்றும் 95 ஆவது வார்டு உறுப்பினர் இந்திரா காந்தி, ஜெயன்ட் இயக்க முன்னோடி எல். கிருஷ்ணசாமி, நாயகி இயக்க தலைவர் சுரேந்திரன், விஜயகுமார் மற்றும் தொழிலதிபர் கிருஷ்ணாராவ், செல்வராணி கோபி, பொறியாளர் சொ. ராம்குமார் முன்னிலை வகித்தனர். கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் வளரட்டும் தலைமுறை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சமூக சேவகர் பொள்ளுமணி, எல். கே. பாலாஜி உள்ளிட்ட பலர் சிறப்பாகச் செய்திருந்தனர்.














 

No comments:

Post a Comment