ஆழ்மனமும் மனச்சக்தியும்.
“செய்வன திருந்தச் செய்” இது சாதனைக்கான தொடர்படி, என்ன செய்தாலும் சுயதிருப்தி
(Self Satisfaction) முக்கியம். மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ விமர்சனம் செய்வார்களோ எனக் குழம்பவே கூடாது.
மற்றவர்கள் நம்மைச் சாதனையாளர் எனப் பாராட்ட வேண்டும் எனக் காத்திருக்கக் கூடாது. உங்கள் ஈடுபாடு உங்களுக்கு மட்டுமே தெரியும். உங்களிடமுள்ள அபரிமிதமான, அளப்பரிய, அற்புத மனசக்தியின் மூலம் எதையும் சாதிக்க முடியும்.
அந்த மனசக்தி தான் ஆழ்மனம் என்பது. இதை உபயோகியுங்கள்.
ஆழ்மனக் காட்சிகள் அற்புதங்களை நிகழ்த்தும். நீங்கள் நம்புங்கள் நீங்கள் சாதனையாளர் தான்.
மீண்டும் ஒருமுறை படியுங்கள். உங்களாலும் சாதிக்க முடியும். சாதிப்பதற்காகவே பிறந்துள்ளீர்கள்,
வாழ்த்துக்கள்
.
No comments:
Post a Comment