Friday 13 January 2023

ஆளுநரின் பொங்கல் பெருவிழாவில் மனிதத்தேனீ

 தமிழக ஆளுநர் மாளிகை

மக்கள் மாளிகையாகக்
காட்சி தருகின்றது.
ஆளுநரின் பொங்கல் பெருவிழாவில் மனிதத்தேனீ.
இன்று இரவு சென்னை ராஜ் பவன், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் பெருவிழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம்.
உடன் எண்ணுக தமிழில் எழுதுக தமிழில் என்ற முழக்கத்துடன் செம்மொழித் தமிழுக்கு அயராது உழைத்த நெற்குப்பை இராம. விசுவநாதன் அவர்களின் மகன்
விசு. சொக்கலிங்கம்.
மற்றும் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் கெளரவ ஆலோசகர் எஸ் பி. ஜெயப்பிரகாசம்,சிவகாசி ஜெ பி. பன்னீர்செல்வம், முனைவர் தீனதயாளன் உள்ளனர்.
இந்த விழாவில் நமது ஆளுநர் மேதகு ஆர் என். ரவி மற்றும் அவரது இல்லத்தரசியார் லட்சுமி ரவி இருவரும் வருகை தந்த இரண்டாயிரம் பேரையும் அவர்களது இருக்கைக்கே சென்று வாழ்த்து தெரிவித்தும் பெற்றும் மகிழ்ந்தனர்.
ஏராளமான அரசியல் தலைவர்கள், தமிழ் உணர்வாளர்கள், கல்வியாளர்கள், ஆன்மீக அறிஞர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்தது வரலாற்றுப் பெருவிழாவாக அமைந்தது.
பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நமது தமிழர் பண்பாட்டை கண்முன் கொண்டு வந்து சேர்த்தது இந்த பொங்கல் திருநாள் தனிச் சிறப்பு.
வாழிய பொங்கல் பெருவிழா கலை நிகழ்ச்சிகள். - மனிதத்தேனீ























No comments:

Post a Comment