ஜெய்ஹிந்த்
சுந்தர்………..
ஜெய்ஹிந்த் என்றுதினம் சொல்வோம் - நாம்
இந்தியர் என்றோங்கிக் கூவிக் களிப்போம்
பொய்முந்தி வைத்திங்கு பேசும் - சிறு
புல்லரைக் கீழ்தள்ளிப் போட்டே மிதிப்போம்
செய்வினை செய்திங்கு வைப்பார் -இவர்
செய்யாத துயரில்லை போட்டுத் துவைப்பார்
பொய்வினை பலவிங்கு ஆற்றி - நாளும்
பிரிவினை பேசிநம் மானம் சிதைப்பார்
தமிழென்ற மொழியொன்று கொண்டோம் - அதன்
தம்பிகள் எனநூறு நாடெங்கும் கண்டோம்
அமிழ்தென்று சொல்லித்தேன் உண்டோம் - இவை
அத்தனையும் ஒருதாயின் உதிரமே கண்டோம்
இந்தியும் சமஸ்க்ருதமும் உண்டு - இன்னும்
இவையோடு மொழிநூறு நாடெங்கும் உண்டு
சொந்தமே நமக்கென்று கொண்டு - வைடா
சொல்லாத வர்வாயில் பெரிதொன்று குண்டு
வடக்கென்றும் தெற்கென்றும் சொல்லிப் - பிரிக்கும்
வழக்கொன்றை நாட்டிலே இன்றே ஒழிப்போம்
கிழக்கென்ற திசையார்க்கும் ஒன்று - வெள்ளிக்
கீற்றென்று வெளியில்வர இன்றே முழிப்போம்
No comments:
Post a Comment