Friday 11 June 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 68 இல் தடம் பதிக்கும் மதுரை பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றிய அண்ணன், சிறந்த கவிஞர், அன்னைத் தமிழுக்கு நாளும் அணி சேர்த்திடும் செம்மல், அனைவரிடமும் அன்புடன் பழகும் பேராற்றல் மிக்க கவிமாமணி நெல்லை சுப்பையா அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். தற்போது மைசூரில் வசிக்கின்றார். நலமே நாளும் மேலோங்கட்டும். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment