Monday 21 June 2021
ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான ஒரு வாரமாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், வீட்டுக்கு வீடு சென்று தடுப்பூசியின் பயன்கள், அதற்கான தேவை, அரசின் முன்னெடுப்புகள் என்று பல விதங்களில் அரசின் முன்னெடுப்பில் தன்னார்வ தொண்டு நிறுவங்கள் பங்கேற்றன. மாலை 5 மணிக்கு 11 லட்சத்தை இலக்கை தாண்டி ஆந்திரா தற்போது 7 மணி வரை 13 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியாவிலேயெ மகத்தான சாதனை படைத்துள்ளது. அரசு மக்கள் மேல் கொண்டிருக்கும் அக்கறையும் மக்களின் ஒத்துழைப்பும் பாராட்ட வேண்டியது. வீணாக சுய புராண பாடி கொண்டும், மக்களை திசை திருப்ப ஊடகங்களை வைத்து கொண்டு லாலி பாடிக் கொண்டும் இருப்பதால் ஒரு பயனுமில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment