மதுரை நகரத்தார் மகளிர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், 366 பேருக்கு இலவசத் தடுப்பூசி போடப்பட்டது.
மதுரை நகரத்தார் மகளிர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இன்று காலை வடக்குச் சித்திரை வீதியில் உள்ள நகரத்தார் சங்கத்தில் மதுரை மாநகராட்சி சார்பில் இலவசத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவி மணிமேகலை பழனியப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பில்லம்மை மாணிக்கம், மீனாகுமாரி ஆறுமுகம், லெட்சுமி சோமசுந்தரம், சிட்டாள் கிருஷ்ணன், பார்வதி பத்மநாபன் முன்னிலை வகித்தனர்.
காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் பழ. இராமசாமி, டாக்டர் எஸ் எஸ். சுவாமிநாதன், டாக்டர் லலிதா, டாக்டர் மீனாட்சி சுந்தரம் தொடங்கி வைத்தனர்.
ஒருங்கிணைப்பாளர் கே. ஆர். ஞானசம்பந்தன், ஆச்சி வந்தாச்சு நா. பழனியப்பன்,ஷீலா ராமசாமி, சேதுக்கரசி சுவாமிநாதன், எல். அங்கயற்கண்ணி, கீதா மெய்யப்பன், மற்றும் முருகன் டிராவல்ஸ் எஸ்பி. பழனியப்பன், எஸ்பி. பாலு, மதுரை நகரத்தார் சங்கத்தின் நிர்வாகிகள், இளைஞர் சங்கத்தின் நிர்வாகிகள், ஐசிஐசிஐ மெய்யப்பன், வி. சீனிவாசன், வி டி கண்ணன் உள்ளிட்ட பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
டாக்டர் பூர்ணிமா குழுவினர் சிறந்த முறையில் தடுப்பூசி செலுத்தினர், பங்கேற்ற அனைவருக்கும் மாநகராட்சி சார்பில் கபசுரக் குடிநீர், மகளிர் சங்கத்தின் சார்பில் தேநீர், பிஸ்கட் வழங்கப்பட்டது.
சமூக இடைவெளியுடன் மிக நேர்த்தியாக காலை 9-30 முதல் மாலை 3-45 வரை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment