Wednesday 20 February 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கூட்டணி குறித்து பேரறிஞர் அண்ணா....
#எனது_நிலைப்பாடு
"என் வீட்டில் ஒரு திருடன் திடீரென புகுந்துவிட்டால்
அவனை அடிக்க எந்தத் தடி அகப்பட்டாலும் அதை எடுத்து அடிப்பேன்.அப்போது, சுதந்திரா தடியென்றோ, கம்யூனிஸ்ட் தடியென்றோ,பார்க்கமாட்டேன்...
எல்லா தடிகளையும் உபயோகிப்பேன்.
காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக மற்ற கட்சிகளுடன் உடன்பாடு செய்துகொள்வது தவறாகாது...
கொள்கையில் பற்றும் இலட்சியத்தில் வலுவும் இருப்பவர்கள் யாருடன் சேர்ந்தாலும் அழிந்துவிடமாட்டார்கள்...
இதில் எனக்குத் துணிவும் நம்பிக்கையும் இருந்து வருகிறது."
- பேரறிஞர் அண்ணா
1967 தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான மெகா கூட்டணியை அமைத்து
தி.மு.க. 138 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியது.
நன்றி முத்து சிவக்குமார்
நன்றி முத்து சிவக்குமார்

No comments:

Post a Comment