தேவாரம், திருவாசகத்தை இசை வடிவில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..
தமிழ் இசை பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்திட தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக் பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அந்த பல்கலைக்கழகத்தின் சார்பில் ஜெயம் 2019 என்ற நிறுவனர் தின விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகிய பாசுரங்களை இசை வடிவில் மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நன்றி ராஜப்பா தஞ்சை
நன்றி ராஜப்பா தஞ்சை
No comments:
Post a Comment