Thursday 28 February 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*தலைப்பு - மீண்டு வரவேண்டும்*
அண்டை நாட்டு நல்லுறவை
அமைதி வழியாய் பேணுவதும்
சண்டை சச்சரவு தவிர்த்திட்டு
சமாதானம் விரும்பும் பாரதம்
போரைத் தேடிப் போவதில்லை
போட்டுத் தாக்கும் நோக்கமில்லை
பொதுவாய் அமைதி நிலவவே
பொறுப்புடன் இருக்கும் பாரதம்
புல்வாமா தாக்குதல் நடந்ததால்
புரவியின் வேகம் கொண்டாலும்
புத்தி சாதுர்யம் கொண்டிங்கே
பொறுமையொடு தீட்டிய திட்டமாகும்
வேகம் கொண்டு விமானங்கள்
விடியலில் விரைந்து சென்றது
வளரும் தீவிரவாத மண்ணை
வேரோடு வீழ்த்திட்டு வந்தது
பக்குவம் இல்லா பாகிஸ்தான்
பரந்து அனுப்பிய விமானங்கள்
பாரதம் நோக்கி வந்ததை
பக்குவமாய் விரட்டியது ராணுவம்
விமானம் சுற்றி வளைத்ததில்
வேகமாய் திரும்பினர் எதிரவர்கள்
விமானி நம்மவர் வீரமகன்
வசமாய் அவரிடம் சிக்கிட்டார்
பாரதத் தாயின் இனியமகன்
பாரதம் காக்கச் சென்றமகன்
பண்பு நிறைந்த‌ அபிநந்தன்
பத்திரமாய் மீண்டு(ம்) வரவேண்டும்
இத்தனை நடந்து இருந்தாலும்
எதையும் எதிர்க்கும் ஆற்றலொடு
எல்லாம் பலமும் கொண்டிங்கே
எதிர்த்து வென்றிடும் பாரதம்!
என்றும் அமைதி விரும்பும்
தேவகோட்டை லெட்சுமி நாராயணன்.

No comments:

Post a Comment