Monday 20 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கடுமையான அதிகார தோரணையுடைய ஒருவர் ஒரு கம்பனியின் நிர்வாக பொறுப்பை ஏற்றுகொண்டார்.
*" சும்மா சோம்பி இருப்பவர்களுக்கு இங்கே இடமில்லை. வெளியே துரத்த படுவார்கள் " என்று முதல் நாளே மிரட்டினார்.*
ஒரு நாள் மற்ற பணியாளர்கள் எல்லாம் சுறுசுறுப்பாக வேலை செய்ய, ஒருவன் மட்டும் சுவரில் சாய்ந்து நின்று இருப்பதை கவனித்தார்.
*" ஏய், வா இங்கே ..! என்று கோபமாக அழைத்தார்.*
அவன் பதறி வந்தான்.
" உன் சம்பளம் எவ்வளவு..? "
ஐயாயிரம் ரூபாய் , ஐயா..!
என்னுடன் வா...!
கோபத்துடன், சம்பள கணக்கு பிரிவுக்கு சென்று பத்தாயிரம் ரூபாய் வாங்கி, அவனிடம் கொடுத்து, *"இந்தா இரண்டு மாத சம்பளம். இனி உனக்கு இங்கே வேலை இல்லை"* என்றார்.
_அவன் பதில் சொல்ல விரும்பியபோது, *"வெளியே போ"* என்று விரட்டிவிட்டார்._
தான் கடுமையானவன் என்பதை நிருபித்த பெருமையில், ஒரு பணியாளரை கூப்பிட்டு... *"என்ன புரிந்து கொண்டாய்...?"* என்றார்.
*_"பீட்சா டெலிவரி செய்ய வந்தவனுக்கு, நீங்கள் மனது வைத்தால் கொழுத்த டிப்ஸ் கிடைக்கும் என்பதை"_*
*கோபத்தில்* இயங்கும்போது இப்படிதான் தாறு மாறாக முடிவுகள் எடுக்க நேரும்.
*உங்களை நீங்கள் பெரிதாக எண்ணாமல், நீங்கள் நினைப்பதுதான் சரி என்ற அகங்காரத்துடன் இல்லாமல், இருந்தால் எந்த பிரச்சனை நம்மை கட்டிப் போட முடியும்?*
*பிரச்சனைகளின் விளைநிலம் நமது குடும்பமோ , நிறுவனமோ அல்ல. நமது மனம் தான்.*

No comments:

Post a Comment