Monday 27 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🛣 புறம் பேசுபவர்களை புறக்கணியுங்கள். மன நிம்மதி நிலைக்கும். பிறரது வெற்றியைப் பாராட்டி பழகுங்கள். மனம் மிக அழகாகும்.
🛣 நியாயமான கோபம் என்றாலும் நிதானத்தோடு பேசுங்கள். கோபம் விரைவில் மாறி விடும். ஆனால் கோபத்தில் பேசிய வார்த்தை நினைவில் வலித்து கொண்டே இருக்கும்.
🛣 அடுத்தவர்களோடு நம் வாழ்க்கையை ஒப்பிடாத வரை நமக்கு கிடைத்திருப்பது உயர்வான வரம் தான். சுமையாக நினைக்காத வரை வாழ்க்கையும் சுகமே.
🛣 கோபத்தில் கொதிக்கும் மனிதனின் மனம் ஒரு போதும் தெளிவாய் இராது. கவலையை கை விடுவோம். மகிழ்ச்சியாய் வாழப் பழகுவோம்.
🛣 மற்றவர்கள் பயப் படும் படி வாழ்வதல்ல வாழ்க்கை. மற்றவர்களுக்குப் பயன் படும் படி வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment