Friday 17 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🇨🇩 கஷ்டப் படும் போது கண்டுக்காதவனைக் கூட நம்பிடலாம். ஆனா எல்லா பிரச்சனையும் முடிந்த பிறகு வந்து, அட்வைஸ் பண்றவனை மட்டும் நம்பவே கூடாது.
🇨🇩 இங்க எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் எடை போட்டு தான் வாழுறாங்க. என்ன ஒன்னு அதிகமா எடை போட்டு ஏமாறுறாங்க. இல்ல குறைச்சு எடை போட்டு ஏமாத்துறாங்க.
🇨🇩 அறிமுகம் இல்லாதவர் கோரும் மன்னிப்பை புன்சிரிப்புடன் ஏற்கும் மனது தான், அன்பு வைத்தவர் நம்மிடம் கோரும் மன்னிப்பை ஏற்க மறுக்கிறது.
🇨🇩 எல்லோருக்கும் இறைவன் கொடுத்த அறிவும், பலமும் இருக்கும்போது, குறுக்கு வழியில் ஜெயித்திட நினைக்ககாமல், நல்ல வழியில் செல்வோம். நல்லதே நடக்கும்.
🇨🇩 பிறர் சொல்லும் அறிவுரையை கேட்டுத் தான் நடக்க வேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை. உன் மனசாட்சியை கேட்டு அதன் வழி நடந்தாலே போதுமானது.
🇨🇩🇨🇩🇨🇩🇨🇩🇨🇩🇨🇩🇨🇩🇨🇩🇨🇩🇨🇩🇨🇩🇨🇩🇨🇩🇨🇩🇨🇩🇨🇩
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment