Wednesday 29 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இனம் ஒன்று தான்,குணம்.....?
ஒரு ஈயும், தேனீயும் ஒரு நாள் வழியில் சந்தித்துக் கொண்டன.
ஈ , தேனீயிடம் கேட்டது ,
" நண்பா , சாப்பிட்டு விட்டாயா ? "
தேனீ சொன்னது ,
" இல்லை நண்பா , அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன்
தேனீயின் பதிலைக் கேட்ட ஈ விழுந்து விழுந்து சிரித்தது .
பூமி முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே....?
உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா....?
அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்க அரிதான விஷயத்தைத் தேடி இவ்வளது தூரம் அலைந்து கஷ்டப்படுகிற உன்னைப் பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும் "
என்றது.
தேனீ கோபப்படவில்லை.
உன் கண்களுக்கு இனிய உணவாகவும்,
இன்ப மயமாகவும் காட்சியளிக்கும் சகலமும் , எனக்கு நாற்றம் பிடித்தவையாகவும்,
அருவறுக்கத் தக்கவையாகவும் தோன்றுகிறதே
இயற்க்கை எழில் கொஞ்சும் நந்தவனங்களில்,நான் சேகரித்து சேமித்து வைக்கும் என்னுடைய உணவுகளின் இனிமை,ஆண்டுகள் பல ஆனாலும் அதே சுவையோடு அப்படியே இருந்து பல பேருக்குப் மருந்தாகவும் பயன்படும்.
ஆனால் உன்னுடைய உணவு,
அழுகிப் புழுத்து அழிந்து போன,சாக்கடையும் குப்பையும் பல பேருக்கு வியாதியை உற்பத்தி செய்வதும்,ஏன் அவர்களின் உயிரையும் பறிக்கக் கூடியது.
அத்துடன் உன்னுடைய கூட்டம் மட்டுமே அந்த நாற்றத்தைத் தேடிப் போகும்.அதை இன்பமாகவும் கருதும்.
அதனால் தான் உன்னை அழிக்கவும்,என்னை வளர்க்கவும் செய்கின்றனர்".
பாவங்களை இன்பமாய்க் கருதி வாழும் பிறவிகளின் கண்களுக்குப் பரிசுத்தவான்கள் பைத்தியங்களாய்த் தோன்றுவது இயற்கைதான்.
நன்றி திரு ராஜப்பா

No comments:

Post a Comment