Monday 27 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌼மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!
🌼வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.
அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள்.
மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.
🌼1. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.
🌼2. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.
🌼3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.
🌼4. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல
🌼5. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல
🌼6. சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
🌼7. அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம்
கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.
🌼8. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.
🌼9. கஷ்டம் தான் … ஆனா முடியும்.
🌼10. நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம்.
🌼11. இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?
🌼12. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?
🌼13. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.
🌼14. ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப் பார்.
🌼15. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?
🌼16. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?
🌼17. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.
🌼18. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.
🌼19. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.
🌼20. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.
🌼21. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.
🌼22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.
🌼23. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.
🌼24. சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு
வேலையை ஆரம்பி.
🌼25. ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.
🌼26. உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,
அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?
🌼27. ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?
🌼28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.
🌼29. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?
🌼30. அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி
இல்லையா?
🌼31. அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே
போதும்.
🌼32. நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?
🌼ஆம், நண்பர்களே,
🌼 * வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்.
🌼முயற்சியுடன் எழுந்திடுங்கள்! உங்கள் உயரத்தை உலகுக்கு காட்டுங்கள்

No comments:

Post a Comment