அவரவர் வாழ்க்கை.
கட்டுப்படுத்த முடியாத மனம்தான்
ஒரு மனிதனின்
மோசமான எதிரியாகும்.
மனம் இயங்கும் போது
இன்பம்,
துன்பம்,
வெற்றி,
தோல்வி,
மகிழ்ச்சி,
இகழ்ச்சி
இவற்றை வழங்குகிறது.
மனம் தன் இயக்கத்தை
நிறுத்தும்போது போது
தெளிவு, ஞானம், பேரானந்தம் ஞானத்தையும் கடந்த நிலை ஏற்படுகிறது.
விழுவதற்கு உங்கள்
கால்கள் முடிவு செய்தால்
எழுந்து ஒடுவதற்கு உங்கள் மனதைத் தயார் செய்யுங்கள்.
விழுவது உங்கள் கால்களாக
இருந்தால். எழுந்து ஓடுவது
உங்கள் மனமாக இருக்கட்டும். உடல் திடமாக இருப்பதை விட
மனம் திடமாக இருப்பது மிக அவசியம்.
அவரவர் மனம்போல்
அவரவர் பாதை.
அவரவர் மனம்போல்
அவரவர் வாழ்க்கை.
கடினமான பாதைகள் தான்
அழகான இடத்திற்கு
நம்மை அழைத்துச் செல்லும்.
No comments:
Post a Comment