Wednesday 20 December 2023

மனதுக்கும் உடலுக்கும் .

 மனதுக்கும் உடலுக்கும் . .

*கொடிய குணங்களில்
ஒன்று கோபம்.*
*கோபம் உங்கள் மனதைகக்
கொதிக்க வைத்து விடும்.*
*கொதிக்கும் நீரில்
நம்மால் எதையும் பார்க்க முடியாது.*
*ஆனால் அமைதியாக
இருக்கும் குளத்து நீரில்
நம் முகம் தெளிவாகத் தெரியும்.*
*நாம் எப்போதும்
அமைதியாக இருப்பது நம் மனதுக்கு நல்லது,
அதனால் உடலுக்கும் நல்லது.*
*அமைதி காப்போம்
ஆரோக்கியமாக*_ _*வாழ்வோம்.*
*ஒவ்வொரு நீர்த்துளியும்*
*மரங்களுக்கு உயிரூட்டும்*
*ஒவ்வொரு*_ _*வியர்வைத்துளியும்*
*நம் வாழ்வை*_ _*உயர்த்தும்.*
*எல்லா கல்லையுமா
கருவறைக்குள் ஏற்ற முடியும், அதேபோல தான் வாழ்கையில் ஜெயுச்சவங்களும்.*
*சில கற்கள்
செதுக்க முயற்சிக்கும் போதே
வலி தாங்க முடியாமல்
தன் தகுதியினைக் குறைத்து கொள்கின்றன.*
*உற்சாகமுள்ளவனை
எதிர்ப்புகள் தடை செய்வதில்லை.*
*மாறாக, அவனுக்கு அது மேலும் ஊக்கத்தை ஊட்டுகிறது.*
*வாழ்க்கையின் நிலை மாறலாம்.*
*உணர்வுகளும்
மாறிக் கொண்டே போகலாம்.*
*ஆனால்*
*இருப்பதைக் கொண்டு
வாழும் நிறைவான மனநிலையும்,*
*எதற்கும் அசைந்து கொடுக்காத மனநிலையும் மகிழ்ச்சியைத் தக்க வைக்கும்.*
*எவ்வளவு யோசித்தாலும்*
*இறைவன் எழுதிய எழுத்தின்* *அடிப்படையில் தான்*
*எல்லாமே நடக்கும்.*

No comments:

Post a Comment