Monday 4 December 2023

அன்பும் ஆற்றலும்

 அன்பும் ஆற்றலும் . .

ஒருவருக்கு எந்தளவு சொத்து இருக்கிறதோ
அந்தளவு அவர் சந்தோஷமானவர், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்’
என்று சொல்லப்படுவதை
நீங்கள் கேட்டிருக்கிறீர்களா
இந்த எண்ணத்தில்தான், கோடிக்கணக்கான மக்கள் நிறைய பணம் சம்பாதிப்பதற்காகத்
தினம் தினம் இலக்கு இல்லாமல் உழைத்துக் களைத்துப்போகிறார்கள்.
ஆனால்,
காசுபணமும் சொத்துசுகமும் நிலையான சந்தோஷத்தைத்
தருமா, அதுக்கு ஏதும்
ஆதாரம் இருக்கிறதா.
நம்முடைய அடிப்படைத் தேவைகள் பூர்த்தியான பிறகு,
வருமானம் எவ்வளவுதான் அதிகமானாலும், அது நம்முடைய சந்தோஷத்தையோ மனநிறைவையோ கடுகளவுகூட அதிகரிக்காது என்று ஜர்னல் ஆஃப் ஹேப்பினஸ் ஸ்டடீஸ் சொல்கிறது.
*"பணம்
பிரச்சினைக்குக் காரணமல்ல."
“பணம், பணம் என்று
அலைவதுதான்
பிரச்சினைக்குக் காரணம்”* என்கிறது மானிட்டர் ஆன் ஸைக்காலஜி என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை. பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது.
“வெள்ளியை நேசிக்கிறவன்
எவ்வளவு வெள்ளி கிடைத்தாலும் திருப்தியடைய மாட்டான்.
சொத்துகளை விரும்புகிறவன் எவ்வளவு வருமானம்
வந்தாலும் திருப்தியடைய மாட்டான்.”
“வேலை செய்கிறவன் கொஞ்சம் சாப்பிட்டாலும் சரி, நிறைய சாப்பிட்டாலும் சரி, நிம்மதியாகத் தூங்குவான்.
ஆனால், ஏராளமாகச் சொத்து சேர்த்து வைத்திருப்பவன்
தூங்க முடியாமல் தவிப்பான்.”
இந்த கவலைக்கு காரணம்,
தீராத பண ஆசைதான்.
ஒருவருக்குப் பண ஆசை இருந்தால், உண்மையான
சந்தோஷத்தைத் தருகிற விஷயங்களுக்காக, அதாவது தன் குடும்பத்தாருக்காக,
நண்பர்களுக்காக,
ஆன்மீகக் விஷயங்களுக்காகக் கொடுக்க வேண்டிய பொன்னான நேரத்தைக் கூட கொடுக்காமல் போய்விடலாம்.
*உண்மை
தனியாகச் செல்லும்.
பொய்க்குத்தான் துணை வேண்டும்*
*வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக
ஆக்கிக் கொள்வோம்.*
*தன்னை ஒருவராலும்
ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான். *
*உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள். *
*செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்*
*அன்பையும் ஆற்றலையும்
இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர். *
*வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்*
*தோல்வி ஏற்படுவது
அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.*
*பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல்,
நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.*
*கடினமான செயலின்
சரியான பெயர்தான்
சாதனை.
சாதனையின்
தவறான விளக்கம் தான் கடினம்*
*ஒன்றைப் பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே
துவக்க வேண்டும்*
*சரியானது எது
என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப்
பெயர்தான் கோழைத்தனம்.*
*ஒரு துளி பேனா மை
பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது.*

No comments:

Post a Comment