Saturday 16 December 2023

வெளிப்படையான பணி . .

 வெளிப்படையான பணி . .

ஒரு கோவிலில்
கல் தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.*
ஒரு கல்தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக் கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன.*
எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன. அதைக் கண்ட வழிப் போக்கர் ஒருவர்,*
“ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா” என்றார்.*
கல் தச்சர் சொன்னார்,*
“எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது.
ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால்
இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன் என்றார்..*
வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்து விட்டுச் சொன்னார்*
எந்த சேதமும்
எனது கண்ணுக்குத்
தெரியவில்லையே” அய்யா.*
தனது வேலையில்
கவனத்துடன் இருந்த கல் தச்சர் சொன்னார்*
“அந்த சிலையின்
மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதம் உள்ளது.”என்றார்.*
இந்தச் சிலையை எங்கே
நிர்மாணிக்க இருக்கிறீர்கள்”
- வழிப் போக்கர்.*
“50 அடி உயரத்தில் மேலே
நிர்மாணிக்க இருக்கிறோம்” ,,*
*ஐம்பதடி உயரத்தில் இருக்கப் போகிற சிலையின் மூக்கு அருகில் இருக்கும் இந்தச் சிறிய சேதத்தை
யார் கவனிக்கப் போகிறார்களா”
என்ன என்றார் வழிப்போக்கர்.*
தனது வேலையைச்
சற்று நிறுத்தி விட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன்
கல் தச்சர் சொன்னார்,*
“யார் கவனிக்கப் போகிறார்கள்
- எனக் கேட்கிறீர்கள்.*
அய்யா,வேறு யாருக்கும்
அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.*
எனது கடமையில்
இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை.*
சேதம் சிறியதா ,
பெரியதா என்பது பற்றிக் கவலை இல்லை.
செய்யும் தொழிலில் பிழை ஏற்படலாம். ஆனால்
பிழையை மறைக்காமல் வெளிப்படையாக
இருக்கவே விரும்புகிறேன்”. என்றார் அந்தக் கல் தச்சர்.*
*உயர்ந்த தரம் என்பது
அடுத்தவரின் பார்வையில் இருந்து
வர வேண்டியது இல்லை.*
*அது தனக்குள்ளேயே
இருந்து தான் வர வேண்டும்.*
*அடுத்தவருக்காக
வேலை செய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட,
தன் மனத் திருப்திக்காக
வேலை செய்வதில் கிடைக்கும்
மகிழ்ச்சி அதிகம். *

No comments:

Post a Comment