Tuesday 26 December 2023

நம்பிக்கை விதைகள் (இலவச வெளியீடு) நூல் வெளியீட்டு விழா

 நம்பிக்கை விதைகள்

(இலவச வெளியீடு)
நூல் வெளியீட்டு விழா.
இன்று மாலை மதுரைத் திருநகர் எங்கள் இல்லத்தில் நடைபெற்ற எளிய விழாவில், திருநகர் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில், இருபத்தைந்து ஆண்டுகள் தலைவராகப் பணியாற்றிய எங்கள் தகப்பனார் கா. ராமன் செட்டியார் 35 ஆம் ஆண்டு நினைவைப் போற்றிடும் வகையில் நம்பிக்கை விதைகள் எனும் நூலினை சமூக ஆர்வலர், ஹைடெக் அராய் நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் வ. சண்முகசுந்தரம் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். முதல் நூலினை திருநகர் பேரூராட்சி மேனாள் சேர்மன், பொறியாளர் ஆர். கே. பலராமன் பெற்றுக்கொண்டு கருத்துரை வழங்கினார்.
பொறியாளர் சொ. ராம்குமார் வரவேற்புரை ஆற்றிட கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் தலைமையுரை ஆற்றினார். ஆர். விஸ்வநாதன் முன்னிலை வகித்தார் ஆர். சம்பந்தன் நிறுவன நினைவு நிதியினை வழங்கினார்.
திருநகர் மூத்த முன்னோடி கே. தேசிகன், பேராசிரியர் சி எஸ். விசாலாட்சி, கோவில்பட்டி த. சரவண செல்வன், கஸ்தூரி கிருஷ்ணன், தாம்பிராஸ் இல. அமுதன் ஆகியோர் நினைவுப் பரிசினை வழங்கினர்.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றச் செயற்குழு உறுப்பினர் அ. பாலு நன்றி கூறினார்.
விழாவில் சமூக சிந்தனையாளர் பொன். மனோகரன், எழுத்தாளர் கோ. ஏகாம்பரம், ரெ. கார்த்திகேயன், மீ. ராமசுப்பிரமணியன், பி. பன்னீர்செல்வம், ஏ சி. பாபுலால், தனித்தமிழ் முருகேசன், கந்தசாமி, பேராசிரியர் மு. முருகேசன், பேராசிரியர் ஸ்ரீ ராம், எம். தங்கமாரியப்பன், கவிஞர் சு. பாலகிருஷ்ணன், வீ. காளீஸ்வரன் ஜெயப்பிரகாஷ் ஆசிரியர் செல்வா, குடந்தை ரகுநாதன், என். மகேந்திரராஜா, ஸ்வீடு டிரஸ்ட் நிர்வாகி கோவிந்தராஜ், பிஎல். சுப்பையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இருபது நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற விழாவில் அண்ணல் காந்தியின் நாட்காட்டி வழங்கப்பட்டது.























No comments:

Post a Comment