Monday 11 December 2023

வாழிய பல்லாண்டு. 10.12.2023 அகவை 84 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், 1995 இல் மதுரை நகரத்தார் சங்கத்தின் செயலாளராக நான் பணியாற்றிய போது துணைத் தலைவராகப் பணியாற்றிய பண்பாளர், அண்மையில் தனது எண்பதாம் ஆண்டு விழாவை திருவிழா போல நடத்திய மாமனிதர், பெரும் கொடையாளர், அருள்மிகு கற்பக விநாயகர் திருப்படத்தினை வளரும் தலைமுறைக்கும் சட்டைப் பையில் வைக்கும் வழக்கத்திற்கு வித்திட உழைப்பாளி, சிறந்த குடும்பத் தலைவர், மாநகர் மதுரையில் பல்வேறு நகரத்தார் அமைப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி பொறுப்பு வகித்தவர், அன்பை விதைத்து அனைவரின் பேரன்பைப் பெற்ற கண்டனூர் நா. சிதம்பரம் செட்டியார் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment