Saturday 2 December 2023

முகமூடிகள் .

 முகமூடிகள் .

*நல்ல எண்ணங்களை விதைத்தவர்களுக்கு
அறுவடை காலம் ஆனந்தமானது.*
*உங்கள் எதிர்காலம்
உள்ளங்கை ரேகையில் இல்லை.
அது உங்கள் உள்ளத்தின்
உள் எண்ணத்தில் உள்ளது.*
*எண்ணங்கள் என்னும்
மந்திரச் சாவியைச் சரியாகப் பயன்படுத்தினால்
திறக்காத கதவுகளையும் திறக்கலாம்.*
*உங்கள் வீட்டின் சாவி
உங்களிடம் இருப்பது போல்,
உங்கள் மனதின் சாவியும்
உங்களிடமே இருக்க வேண்டும்.*
*விரும்பிச் செய்யும்
ஒவ்வொரு செயலிலும்
இருக்கும் அழகு செயலாற்றும்
நபருக்கு மட்டுமே தெரியும். *
*வேடிக்கை மனிதர்களுக்குத்
தெரிய வாய்ப்பு இல்லை.*
*ஒரு மலரை
நீ நசுக்கியெறிந்தப் பிறகும்.*
*அது தரும்
மாறாத மணம் தான் மன்னிப்பு.*
*நேரம், நபர்கள் , சூழ்நிலை*
*இவற்றிக்குத் தகுந்தாற் போல் முகமூடிகள் அணிபவர்கள்,*
*நிச்சயம் ஒரு நாள் முகமூடிகள் கிழித்துத் தோலுரிக்கப்படுவார்கள்.*
*குணமும் பணமும்
ஒருவகையில் ஒன்று தான்.
இரண்டுமே நிலையாய்
இருப்பதில்லை மனிதர்களிடத்தில்.*
*நிரந்தரமாக இன்பம் துன்பம் அடைந்தவர்கள் இல்லை.
ஒரு கட்டம் வரவு,
ஒரு கட்டம் செலவு,
ஒரு கட்டம் இன்பம்,
மறு கட்டம் துன்பம்.*
*இது தான் இயற்கை
என்பதை உணர்ந்து கொண்டு மகிழ்ச்சியாய் புன்னகையுடன் நகர்ந்து செல்வோம்.*
*வரிகளைச் சுமந்தால்
தான் அது கவிதை.
கற்பனைகளைச் சுமந்தால்
தான் அவன் கவிஞன்.
வலிகளைச் சுமந்தால் தான்
அது வாழ்க்கை.
காயங்களைச் சுமந்தந்தால்
தான் அவன் மனிதன்.*

No comments:

Post a Comment