ஏறுவதும் இறங்குவதும் . .
கவலை
பலூன்ல இருக்குற காத்து மாதிரி,
உள்ள இருக்குற வரை
வெளியில் விட்டுட்டா
இருந்த இடம் கூடத் தெரியாது.
பலூன்களைப் போலத்தான்
சில பிரச்சினைகளும்,
ஊதினால் உடையும்
எனத் தெரிந்த பின் ஊதி உடைப்பதை விட, பாதியில் பறக்கச் செய்வதே மிகவும் சிறந்தது.
நீங்கள் பிரச்சனைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் இன்னும் பிரச்சனைகள் வந்து சேரும்.
நீங்கள் தீர்வுகளைப் பற்றிச் சிந்தித்தால் நிறையவே வாய்ப்புகள்
உங்கள் எதிரே தோன்றும்.
எதிலும் வாழப் பழகிக்கொள்ளுங்கள். அப்போது தான்
எதையும் தாங்கும் இதயம் வரும். வாழ்க்கை ஒரு படிக்கட்டு. ஏறுவதும், இறங்குவதும் அவரவர் திறமை.
*நீங்கள் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீமை செய்வதை அனுமதிக்காதீர்கள்.*
*வாழ்க்கையில் இரண்டு விஷயங்களை என்றும் மறவாதீர்கள்.
ஒன்று
மற்றவர்
உழைப்பில் வாழக் கூடாது,
இரண்டு
மற்றவர்
சிரிக்கும்படி வாழக் கூடாது.*
*வெறும் பெருமைக்காக எதையுமே செய்யாதீர்கள்.
உங்கள் மனநிறைவுக்காக உங்களுக்குப் பிடித்ததை பெருமையோடு செய்யுங்கள்.*
*யாரையும் ஏளனமாக நினைக்காதீர்கள்.*
*எல்லோரிடமும்
நீங்கள் கற்றுக்கொள்ள
ஏதேனும் ஒன்று இருக்கும். *
*வார்த்தைகள்*
*பலம் மிகுந்த ஆயுதம் *
*தாக்குவதற்கு*
*பயன்படுத்தாதே *
*தற்காத்துக்*_ _*கொள்வதற்கு*
*மட்டுமே பயன்படுத்து. *
No comments:
Post a Comment