Monday 24 July 2023

ஆறாம் அறிவு.

 ஆறாம் அறிவு.

ஒவ்வொரு உயிரினங்களையும் இயற்கை எதோ ஒரு ரூபத்தில் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.
அதன் செயல்பாடுகள் அனைத்துமே உற்று நோக்கு கொண்டுள்ளது.
ஒவ்வொரு செயலுக்கும் எதிர்மறையான செயல்வினை நடந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் நல்லது நினைத்தால் உங்களுக்கு திரும்ப நல்லதே கிடைக்கிறது.
கெட்டதை நினைத்தால் கெட்டதே நடக்கிறது.
இதெல்லாம் எங்கிருந்து எப்படி நம்மை நோக்கி வருகிறது என்று யோசிக்கும்போது நமக்கு ஆச்சரியமாக உள்ளது.
இயற்கை இந்த பூமியில் நம்மை உருவாக்கத் தொடங்கிய முதலே நேரடி கண்காணிப்பில் வந்து விடுகிறோம்.
அதற்கும் மனித மூளைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
இயற்கை மனிதன் மூளையில் கட்டளையிடுகிறது.
இயற்கை தன்னை சரி செய்து கொள்ள மனிதனை உபயோகப்படுத்திக் கொண்டுள்ளது.
அதுவே நம் ஆறாம் அறிவு என்கிறோம்.
பிரபஞ்சத்தின் தெய்வம் ஏதோ ஒரு சக்தி அனைத்து ஜீவராசிகளையும் தொடர்பு கொள்கிறது கொண்டுள்ளது.
இந்த சக்தியை மனிதர்கள் உணர்ந்து கொள்ள முழுமையாக தவம் இருக்க வேண்டும் அல்லது தியான பலன் மூலமாக அறிய வேண்டும்.
அதற்கு மெய்ஞானம் மிக மிக முக்கியம் சாதாரணமாக மனிதன் பக்குவ நிலையை அடைந்தால் மட்டுமே பிரபஞ்சத்தை உணர முடியும்.
அது ஆன்ம பலமும் தெய்வ பலம் என்று நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
அதற்காக உருவாக்கப்பட்டது மத வழிபாடுகள், எந்த மதத்தை வழிபட்டாலும் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் இறுதியாக செல்வது இயற்கையை உருவான பிரபஞ்சத்திடம் தான்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஒரு தத்துவார்த்தமான உண்மையைச் சொன்னார், நீங்கள் என்னிடம் பேசும் போது அந்த ஒலி அலைகள் கூட பிரபஞ்சத்திடம் சென்று கொண்டு தான் என் செவிகளுக்கு வருகிறது
உதாரணமாக பிரபஞ்சத்திலிருந்து தான் எனக்கு கிடைக்கிறதே தவிர உங்களின் வாயிலிருந்து ஓசை ஒலி எனக்குக் கேட்பதில்லை, இதுவே உண்மை என்றால் சற்று சிந்தித்துப் பார்க்கும்போது எனக்கும் அது சரி என்று தெரிகிறது.

No comments:

Post a Comment