*நிறைகளைப் பாராட்டுவோம்.*
ஒரு நாட்டின் அரசனுக்கு ஒரு காலும்,
ஒரு கண்ணும் ஊனமாக இருந்தது.
அனைவரும் ஊனமுற்ற அவனை அழகாக வரைய முடியாது எனக் கூறி விட்டார்கள். அதனால் மன வருத்தத்துடன் இருந்தான் அரசன்.
சில மாதங்கள் கழித்து ஓவியன் ஒருவன் அரசனிடம் உங்களைப் போன்றே தத்ரூபமான ஓவியம் வரைந்து
காட்டுகிறேன் அரசே எனக் கூறினான்.
அரசன் வேட்டையாடுவதற்கு குறி
பார்ப்பது போன்ற காட்சி. அரசன் ஒரு கண்ணை மூடிக்கொண்டு , ஒரு காலை மடக்கிக்கொண்டு வேட்டையாட குறி பார்ப்பது போன்ற மிக அழகிய காட்சி
மிகச் சிறப்பாக வரையப்பட்டிருந்தது.
அரசனின் அவையில் இருந்த அனைவரும் அந்தத் திறமையான ஓவியத்தை பார்த்து வியந்தார்கள்.
கதை எளிமையாக இருந்தாலும்
Concept அற்புதமானது.
நாம் எல்லோருமே மற்றவர்
குறைகளையே பார்த்துப் பழகிவிட்டோம்.
நிறைகளை பாராட்டும் பக்குவம் ஏனோ சட்டென்று நமக்கு வருவதில்லை.
சற்று மாற்றி யோசிப்போம்.
நட்பு,
உறவுகளில்
குறைகளை பார்க்காமல்,
அவர்கள் நிறைகளைப்
பாராட்டக் கற்றுக் கொள்வோம்.
இது அவர்களுக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, நம்மோடு அவர்களை ஆத்மார்த்தமாக இணைக்கும் பாலமாக இருக்கும்.
நம் வாழ்வும் சிறக்கும்.
இரு தரப்பினருமே
ஒத்தும்,
உதவியும்
வாழ வழிவகுக்கும்.
No comments:
Post a Comment