Monday 31 July 2023

ரசனையும் மகிழ்ச்சியும் . .

 ரசனையும் மகிழ்ச்சியும் . .

*"எதுவும்
நம்மைத் தாண்டி இல்லை.
அனைத்து சக்தியும் திறமையும் நமக்குள் தான் இருக்கு;
அதைத் தட்டி எழுப்புவோம்"*
*கடவுளை நினைத்துச்
செய்யும் எந்தச் செயலுக்கும் பயன் அதிகம். அறியாமல் செய்தாலும் அதற்கும் பலன் அளிக்கிறார்.*
*போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவும், மகிழ்ச்சியும் உண்டாகாது.*
*குடும்பக் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல்,
பெருமைக்காக சமூக சேவையில் ஈடுபடுதல் கூடாது.*
*மனதில்
எழும் ஆசைகளைச்
சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.*
*தேவைகளை அதிகப்படுத்திக் கொள்வது கூடாது.*
*யாரையும் அலட்சியப்படுத்தும் மனப்பான்மை கூடாது.*
*அனைவரிடமும்
கண்ணியத்துடன் நடக்க வேண்டும்.*
*ரசனையோடு எதையும்
அணுகும் போது
அதனால்
கிடைக்கும் சந்தோஷம்
இரட்டிப்பாக இருக்கும்.*
*குட்டையைப் போல ஓரிடத்தில் தேங்கிடாமல்*
*ஆற்றைப்போல் நிற்காமல் ஓடு*
*வெற்றி எனும் பெருங்கடலை
அடையும் வரை.*
*வார்த்தைகளாய்
துளிர் விடும்
அக எண்ணங்களுக்கு
நிறைவு என்பதே கிடையாது*
*வாழ்க்கை
எனும்
நாடக மேடையில்
நல்லவர்களை விட நடிப்பவர்களை தான் நம்புகிறார்கள். *
*அழுவதை
விட அழாமல் இருப்பதே கடினம். *
*சிறந்த பக்குவம் என்பது
சொல்லுவதற்கு பதில்கள் நிறைய இருந்தும்,*
*புரிதல் இல்லாதவர்கள் முன் மௌனமாக இருப்பதே. *
*எதைப் பற்றியும்,
எவரைப் பற்றியும்
நம் தேவைக்கு அதிகமாக தெரிந்து கொள்ளாமல் இருப்பதே
நம் நிம்மதிக்குச் சிறந்த வழி…*

No comments:

Post a Comment