Monday 10 July 2023

மனவலிமை கொண்ட மனிதன்.

 மனவலிமை கொண்ட மனிதன்.

*தோல்விகளைக் கடந்து வந்தால் தான், அங்கே வெற்றி
நம்மை வரவேற்கக் காத்திருக்கும்...*
வெற்றிக்காக உழைக்கிறோம்.
தோல்வி நம் முன் வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம்.
தோல்வி தான் முதலில் வரும்.
அது உலக இயல்பு.
*தோல்வியைக் கண்டு மிரண்டுப் போய் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம்.*
தோல்விக்குப் பின் வெற்றி என்ற கருத்து பொய்யா, மெய்யா, என்று பொறுத்திருந்துப் பார்க்கலாமே.
*இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள்...*
எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் துயரத்தின் எல்லைக்கே போய் விடுகிறார்கள்.
நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற மெய்யியல் (தத்துவம்) அவர்களுக்குப் புரிவதில்லை.
*நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த நேர்நிலை எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்...*
நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போது தான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ
அதுவாக மாறி விடுவோம்.
*நம்மை விட உடலில் வலிமை யானை..,*
*நம்மை விட
வேகத்தில் சிறந்தது குதிரை..,*
*நம்மை விட
உழைப்பில் சிறந்தது கழுதை...,*
இப்படி மிருகங்கள் நம்மை விடப் பல மடங்கு வலிமையாக இருந்தாலும், நாம் தான் அவைகளை அடக்கி ஆள்கிறோம், காரணம், மனிதன் மட்டுமே மனவலிமை கொண்டவன் என்பதால்.
*நமக்கு ஏற்படுகிற சிக்கல்களும் அப்படித் தான்.
அதனை அடக்கியாளும் திறன் நம்மிடம் உள்ளது.*
*சிக்கல்களை நயமாக எதிர்கொள்வோம்.
வெற்றிப்படியை விரைந்து அடைவோம்.*

No comments:

Post a Comment