Thursday 6 July 2023

திறமை புகழ் அகம்பாவம்

 திறமை புகழ் அகம்பாவம் . . .

*அந்தந்த நொடியை அழகாய் வாழ்ந்து விட எல்லோருக்கும் வாய்ப்புகள் அமைவதில்லை.*
*சிலர் மட்டும் அப்படி அமையும் வாய்ப்புகளைத் தவற விடுவதில்லை.*
*பொறுமை
என்பது அவசியமான ஒன்று.*
*விதைத்தவுடன் எவராலும்
அறுவடை செய்து விட முடியாது.*
*எங்கேயும் எப்போதும் அன்பை உணர்தல் ஆகப் பெரும் மகிழ்ச்சி... அன்பிற்கு இனமில்லை.*
*அறிவுரைகள் எளிதில் கிட்டிவிடும்... அனுபவங்கள்
அவமானங்களால் தான் வரும்.*
*கொண்டாட்டங்களின் குவியல் தான் இந்த வாழ்க்கை... எதை எடுக்கிறோம்... எதைக் கொடுக்கிறோம்.*
*எப்படிக் கொண்டாடுகிறோம் என்பது மட்டுமே மாறுபடுகிறது.*
*"திறமை" என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது.
அடக்கத்துடன் இருங்கள்.*
*"புகழ்" என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது...
நன்றியுடன் இருங்கள்.*
*"அகம்பாவம்" என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொண்டது... எச்சரிக்கையுடன் இருங்கள்.*
*நீங்கள் உதிர்க்கும் வார்த்தையில்... உதிரம் இல்லை. ஆனால் உயிர் உண்டு.*
*தவறுகளுக்குச் சூழ்நிலை காரணமாக இருக்கலாம். திருத்திக் கொள்ளாததற்கு சூழ்நிலை காரணமாகாது.*
*ஏமாறுவதற்கும்... ஏமாற்றுவதற்கும்.. சிறு வித்தியாசம்... ஒருவரின் அலட்சியம்... மற்றவருக்கு அவசியம்.*
*கற்றுக் கொள்வதை விட... காயம் படுவதே அதிகம் இங்கே.*
*உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள், என்றும் நினைவில் வையுங்கள்.
உதவாதவர்கள் உங்கள் வெற்றிக்குரியவர்கள்,
என்றும் மறந்து விடாதீர்.*

No comments:

Post a Comment