புதுக்கோட்டை மாவட்டம் செவலூர் அருள்மிகு மதுக்கார நாச்சியம்மன் கோவில் 33 ஆம் ஆண்டு
வருஷாபிஷேக விழா.
நேற்று காலை நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட செவலூர் அருள்மிகு மதுக்கார நாச்சியம்மன் கோவில் 33 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் மனிதத்தேனீ பங்கேற்று 2024 ஆம் ஆண்டு இங்கு நடைபெற உள்ள திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பணிகளை சிறப்பிக்க வேண்டும் என பங்கேற்ற 13 ஊர் நகரத்தார் 456 புள்ளிகளின் குடும்பத்தினர் மத்தியில் சிற்றுரை ஆற்றினார்.
இன்று மிகச் சிறப்பாக காலை முதல் நடைபெற்ற இந்த விழாவில் ஜெபம், ஹோமம், கோ பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் ஏலம் நடைபெற்றது. அதிக அளவில் ஏலப் பொருட்கள் இருந்ததும், அதனை எடுப்பதற்கு பேரார்வத்துடன் நகரத்தார்களின் பங்களிப்பு இருந்தது.
வருபவர்களை அழைத்துச் செல்ல வேன் வசதி, கோவிலில் இருந்து உணவு ஏற்பாடு செய்துள்ள மண்டபத்திற்கு ஆட்டோ வசதி என இலவசமாக செய்திருந்தனர்.
1000 பேர் பங்கேற்று வணங்கிய இந்த விழாவின் மிகச்சிறந்த ஏற்பாடுகளை மிதிலைப்பட்டி மோகன் நடராஜன், நடப்பு காரியக்கார் கொத்தமங்கலம்
கேஎம். முத்துக்கருப்பன், திருப்பணிக் குழுத் தலைவர் காரைக்குடி எம். வீரப்பன் உள்ளிட்ட நகரத்தார் செய்திருந்தனர்.
ஏலம் விடுதல் முதல் உணவு பரிமாறும் பணி வரை அனைத்திலும் 13 ஊர் நகரத்தார்கள் முழு ஈடுபாட்டுடன் இதற்கான பணிகளை நேர்த்தியாகச் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment