Monday 31 July 2023

நம்பிக்கை . . . .

 நம்பிக்கை . . . .

*விடை தெரியாத வரை தான் வினாக்களுக்கு
ஒரு சுவாரசியம் இருக்கும்.*
*எதிர்காலம் அறியாத வரை தான் நிகழ்காலத்திற்கு உயிர் உண்டு.*
*மற்றவருக்கு
நம்பிக்கையாக இருங்கள்.*
*ஆனால், ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதீங்க.*
*நாம் தெரிந்த நியாயம் இது என்று விவாதிக்கலாம் தவறில்லை.*
*ஆனால், நமக்குத்
தெரிந்தது மட்டும் தான் நியாயம்
என்று விவாதிப்பது தான் தவறு.*
*கொடுத்தால் மறந்து விடுங்கள். கிடைத்தால் நினையுங்கள்.*
*பிறருக்கு வருவதை நீங்கள் தடுக்க நினைத்தால் உங்களுக்கு வருவது தானாக நின்று விடும்.*
*நல்லது நடந்தால் அதை அனுபவியுங்கள்
கெட்டது நடந்தால் அதை அனுபவமாக்குங்கள்.*
*இந்த உலகில் இறைவன் நினைத்தால் இயலாத செயல் என்று எதுவும் இல்லை.*
*ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் சோதனை காலங்களில் இறைவனிடம் சரண் அடைவதை விட்டுவிட்டு கவலைகளையும் துன்பங்களையும் நாமே தூக்கிச் சுமக்கின்றோம்.*
*உங்கள் மனதால் சுமக்க முடியாத சுமைகள் வாழ்வில் வரும் பொழுது அதை இறைவனிடம் இறக்கி வைத்து விடுங்கள்.*
*உங்கள் கைகளில் இருக்கும் வரை தான் உங்கள் பிரச்சனைகள் பெரிதாகத் தெரியும்.*
*இறைவனின் கரங்களுக்குச் சென்றுவிட்டால் அனைத்தையும் விட இறைவன் மிகப் பெரியவன்.*
*அவரால் விதியையும் கூட மாற்ற முடியும்.*
*உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நொடி போதும்.*
*ஆகவே எல்லா சூழ்நிலைகளிலும் இறைவனை நம்பி..*
*இறை சிந்தனையுடனும், நம்பிக்கையோடும்,*
*நேர்நிலையான சிந்தனையுடனும் வாழ்க்கையை வாழுங்கள்.*
*உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்வீர்கள்.*
*இறைவன் அருளால் உங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ்வதற்கு
வாழ்த்துகள்
*

No comments:

Post a Comment