Monday 10 July 2023

கண்டனூரில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

 கண்டனூரில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் இன்று காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஊரில் நகரத்தார் 947 புள்ளிகள் உள்ளனர்.
பல்வேறு நாடுகள் மற்றும் ஊர்களின் உள்ள இந்த ஊர் நகரத்தார்கள் பங்கேற்று வணங்கி மகிழ்ந்தனர்.
சிறப்பான யாகசாலை ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
பொது விருந்தில் பல்லாயிரம் மக்களுக்கு உணவு ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக கலை இலக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவன் கோவில் நடப்பு காரியக்கார்கள்
எஸ்பி. மாணிக்கம் என்ற அழகப்பன், கேஎம். முருகப்பன், வயி. காசி
மற்றும் நகரத்தார் விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
அருள்மிகு செல்லாயி அம்பாள் கோவிலில் நகரத்தார்கள் நாட்டார்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
எங்கும் மக்கள் வெள்ளம்.
வாழிய இறைப்பணி வாழியவே.
எங்கள் சிறப்புப் பட்டிமன்றம் இன்று மாலை 6-30 மணிக்கு.
-மனிதத்தேனீ


















No comments:

Post a Comment