Friday 31 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*பூர்ணாதேவி பாத்திமாவாக மாறினாள், தற்போது பிணமாக வங்கதேசத்தில் இருந்து திரும்புகிறாள் - கதறும் பெற்றோர் !!*_
_*அவிநாசி* :- காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு விவாதம் ஒன்றில், 140 கோடி பேர் வாழும் இந்தியாவில் கூடுதலாக குடியுரிமை சட்டத்தால் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமிய அகதிகளுக்கு குடியுரிமை கொடுத்தால் குடியா மூழ்கிவிடும்? என்று கேட்டிருந்தார். தற்போது உண்மையில் ஒரு குடி மூழ்கிவிட்டது!_
_சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டம் கொண்டுவந்து இந்தியாவில் அமல்படுத்தியுள்ளது. இதனை இந்தியாவின் எதிர்கட்சிகள் இஸ்லாமியர்களை புறக்கணிப்பதாக கூறி மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தி வந்தன. மேலும் தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இதனை முழுமையாக எதிர்த்து வந்தன. இந்த சூழலில்தான் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக புகுந்து, மேற்கு வங்கத்தை சேர்ந்தவன் என கூறி அவிநாசியில் வேலை செய்துள்ளான் பங்களாதேஷை சேர்ந்த ரிஷிமுக் என்பவன்._
_இவன் அவிநாசி வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் - செல்வகோமதி தம்பத்தினரின் மகள் பூர்ணிமா தேவியை காதலித்து திருமணம் செய்து, அவளை பாத்திமா என மதம் மாற்றி தொடக்கத்தில் மேற்கு வங்கத்திற்கு அழைத்து சென்றவன், அதன்பிறகு பங்காளதேஷிற்கு அழைத்து சென்றுவிட்டான்._
_தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் மனைவியை செக்குமாடாக பயன்படுத்தியவன், அவளை வேலைக்கு செல்லுமாறு கொடுமை படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து கடந்த 9-ம் தேதி வங்கதேசத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள பூர்ணிமா பெற்றோருக்கு தொலைபேசியில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், உங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என செய்திவர, அதிர்ந்து போய்விட்டனர் பெற்றோர்._
_இந்நிலையில் வங்கதேச போலீசார் பூர்ணிமா என்ற பாத்திமா தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் சென்று மகளை மதமாற்றியது இல்லாமல் நாடுகடத்தி தற்போது கொன்று விட்டான் எனவும், அவன் வேறு கல்யாணம் செய்வதற்காக எனது மகளை பலி கொடுத்துவிட்டான் எனவும், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என புகார் அளித்தார்._
_விவகாரம் நாடு கடந்து இருப்பதால் தூதரகம் மூலமே நடவடிக்கை எடுக்க முடியும் என அவிநாசி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஐயோ இந்த குடியுரிமை சட்டம் முன்பே வந்திருந்தால் ஊடுருவல்கார நாய் அவிநாசிவரை வந்திருப்பானா? என் மகள் வங்கதேசம் போயிருக்கமாட்டாளே என கதறுக்கின்றனர். தற்போது அவர்களின் கண்ணீர் 140 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் ஊடுருவல்காரர்களை அனுமதித்தால் என்ன குடியா மூழ்கிவிட போகிறது என கேட்ட தனியரசுக்கும், குடியுரிமை சட்டத்தில் ஏன் குறிப்பிட்ட மதத்தினரை சேர்க்கவில்லை என்று போராடியவர்களுக்கும் பதில் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது._
_ஊடுருவல்காரர்கள் இங்கு சட்ட விரோத செயலில் ஈடுபட்டுவிட்டு அவர்களது சொந்த நாட்டிற்கு தப்பித்து சென்று விடுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட போவது இங்குள்ள பூர்ணிமாவின் பெற்றோர்கள்தான் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. தமிழகத்தில் திருப்பூர், கோவை, அவிநாசி, காங்கேயம் ஆகிய பகுதிகளில் மட்டும் போலி அடையாள அட்டைகளுடன் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல பங்களாதேஷ் ஊடுருவல்காரர்கள் இருப்பதாக புகார் கூறப்படுகிறது._
_*இப்போது சொல்லுங்கள் இந்தியாவிற்கு CAA NRC, NPR தேவையா? இல்லையா?*_

No comments:

Post a Comment