Friday 31 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*🍁🍁புதிய பார்வை*🍁🍁
சில காயங்கள்
*மருந்தால்*
சரியாகும்.
சில காயங்கள்
*மறந்தால்*
சரியாகும்...
மனிதனுக்கு
*பிரச்சனை*.
அதனால்,
கடவுளுக்கு
*அர்ச்சனை*...
*வறுமை*
வந்தால்
வாடக்கூடாது.
*வசதி*
வந்தால்
ஆடக்கூடாது...
*கருப்பு*
மனிதனின்
இரத்தமும்
சிவப்புதான்.
*சிவப்பு*
மனிதனின்
நிழலும்
கருப்புதான்...
வியர்வை
துளிகள்
*உப்பாக*
இருக்கலாம்.
ஆனால்,
அவை
வாழ்க்கையை
*இனிப்பாக*
மாற்றும்...
*வீரன்*
சாவது
இல்லை.
*கோழை*
வாழ்வதே
இல்லை...
உன்னை நீ
*செதுக்கி*
*கொண்டே*
இரு.
*வெற்றி*
பெற்றால்
சிலை.
*தோல்வி*
அடைந்தால்
சிற்பி...
மனிதனுக்கு
ABCD
*தெரியும்*.
ஆனா *"Q"* ல
போக *தெரியாது*.
எறும்புகளுக்கு
ABCD
*தெரியாது*.
ஆனா *"Q"* ல
போக *தெரியும்*...
உண்மை
எப்போதும்
*சுருக்கமாக*
பேசப்படுகிறது.
பொய்
எப்போதும்
*விரிவாக*
பேசப்படுகிறது...
பேசிப்பேசியே
நம்மை
ஏமாற்றுகிறார்கள்
என்பதெல்லாம்
*பொய்*.
அவர்கள்
பேச்சில், நாம்
ஏமாந்து
விடுகிறோம்,
என்பதே
*உண்மை*...
குறைகளை
*தன்னிடம்*
தேடுபவன்
தெளிவடைகிறான்.
குறைகளை
*பிறரிடம்*
தேடுபவன்
களங்கப்படுகிறான்.
*கடனாக*
இருந்தாலும்சரி,
*அன்பாக*
இருந்தாலும் சரி.
*திருப்பி*
*செலுத்தினால்தான்*
மதிப்பு...
உறவினர்களில்
யார்
முக்கியம்
என்பதை...
*உயிரற்ற*
பணமே
முடிவு செய்கிறது...
பணம்
கொடுத்துப்பார்.
உறவுகள் உன்னை
*போற்றும்*.
கொடுத்த
பணத்தை
திரும்ப
கேட்டுப்பார்.
மண்ணை வாரி
*தூற்றும்*...
அறுந்து போன
செருப்புக்கு கூட,
வீட்டில்
ஒரு இடம்
*உண்டு*.
இறந்து போன
மனித உடலுக்கு,
வீட்டில்
ஒரு இடமும்
*இல்லை*...
இதுதான்
உண்மை.
இதுவே
வாழ்க்கை...
🌹🌹🙏🙏🙏🌹🌹

No comments:

Post a Comment